NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கரையோர புகையிரத சேவைகள் பாதிப்பு

கடலோர ரயில் பாதையின் பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாதையில் தண்டவாளம் உடைந்துள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.

அதன் காரணமாக கரையோர புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அதனால் கடலோர வழித்தடத்தில் ஒரு தண்டவாளத்தில் மட்டுமே புகையிரதங்கள் இயக்கப்படுவதால் புகையிரதங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியின் திருத்தப் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles