கற்பிட்டி, கந்தகுடாவ கிராமத்தில் உள்ள வீட்டின் கிணற்றில் இரண்டரை மாத சிசுவின் சடலம் மிதப்பதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (2) காலை பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு 119 க்கு அயலவர் வழங்கிய செய்தியின் பிரகாரம், பொலிஸார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.