NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கல்வி கற்பதற்காக கனடா வரும் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு!

கனடாவிற்கு கல்வி கற்பதற்காக வருகை தரும் மாணவர்களின் பணத்தேவைகளுக்காக வாரத்தில் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கனாடவிற்கு கல்வி கற்க வரும் மாணவர்களை பணி செய்ய அனுமதிப்பதால் அவர்களது நோக்கமே பணி செய்வதற்காக மாறியுள்ளதாக அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் கொரோனா பெருந்தொற்றின் போது பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டமையால் அதனை சமாளிப்பதற்காக மாணவர்களை மேலதிகமாக சில நேரம் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

நேற்று  முதல் கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles