களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசுரு உயன பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த வீடு அமைந்துள்ள பகுதியில் கடும் துர்நாற்றம் வீடுவதாக 119 எனும் துரித இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
65 மற்றும் 79 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்றைய தினம் (18) மேற்கொள்ளப்படவுள்ளது.