NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பில் கடந்த 5 ஆம் திகதி காணாமல் போன முதியவர் ஒருவர் இன்று காலை மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள வாவியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சேதுக்குடா மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கதிர்காமநாதன் (73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சுகவீனம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காணாமற் போன நிலையில் அவரது சடலம் இன்று வாவியில் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles