NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காணாமல் போயிருந்த தாயும் பிள்ளையும் கண்டுபிடிக்கப்பட்டனர்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஹேவாஹெட்ட – ரஹ்துங்கொட பிரதேசத்தில் கடந்த 17ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த இளம் தாயும் அவரது மகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

22 வயதான இளம் தாயும் அவரது ஒரு வயது ஏழு மாத பெண் பிள்ளையும் நேற்று (24) பிற்பகல் அவிசாவளை மாணிக்காவ – கலபலன கந்தவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து கண்டுபிடித்ததாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குடிபோதை காரணமாக கணவரின் தொல்லையை பொறுக்கமுடியாமல், தான் வைத்தியசாலைக்குச் செல்வதாகக்கூறிவிட்டு, யாரிடமும் சொல்லாமல் இந்த உறவினர் வீட்டிற்கு வந்ததாக பொலிஸாரிடம் குறித்த பெண் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அவரது கணவர் நேற்று மதியம் விஷம் அருந்தியுள்ள நிலையில், தற்போது அவர் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles