NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காணி தகராறில் சிறுவன் கொலை – அம்பாந்தோட்டையில் சம்பவம் !

அம்பாந்தோட்டை – பெலியத்தை பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் நேற்று மாலை இடம்பெற்ற மோதலில் தந்தையை வெட்டிக் காயப்படுத்திய கும்பல் ஒன்று , 12 வயது மகனை வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தரம் 7 இல் கல்வி 12 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் 38 வயதுடைய தந்தை படுகாயங்களுடன் பெலியத்தை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த கொலை சம்பவமானது காணித் தகராறு காரணமாக அரங்கேறியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது

கொலைச் சந்தேகநபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles