NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி உயிரிழப்பு!

காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட கென்யாவை சேர்ந்த ஒலிம்பிக் தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி உயிரிழந்துள்ளார்.

கென்யாவில் வசித்து வந்த உகாண்டா தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பலத்த காயமடைந்த அவர் உடலில் 75 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தாக உகாண்டா தடகள கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் 44ஆவது இடத்தைப் பிடித்த வீராங்கனையான ரெபேக்கா செப்டேஜி, மேற்கு டிரான்ஸ் நஸோயா கவுண்டியில் உள்ள அவரது வீட்டில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தீவைத்து எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles