NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலதாமதமாக படையெடுக்கும் பிளமிங்கோ பறவைகள்!

இந்தியா தனுஷ்கோடி மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளுக்கு 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் வருகை வந்துள்ளது.

கடல் மாசுபாடு மற்றும் கடல் நீர் தரம் குறைவதால் பறவைகளின் வருகை குறைந்து வருவதாக பறவைகள் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இராமேஸ்வரம் அடுத்து தனுஷ்கோடி செல்லும் பாதையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயில் கடற்கரைப்பகுதி அருகே அமைந்துள்ள கடல் நீர் மற்றும் மழைநீர் தேங்கும் பகுதிக்கு ஐரோப்ப கண்டத்தில் இருந்து பிளமிங்கே பறவைகள் வருடந்தோறும் டிசம்பர் மாதம் இறுதி முதல் ஜனவரி மாத இறுதிவரை உணவு தேடி வந்து செல்கின்றன.

அங்குள்ள சதுப்பு நிலப்பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்களை உணவாகக் கொண்டு வாழ்ந்து வரும் பிப்ரவரி தொடக்கத்தில் தமிழகத்திலுள்ள சரணலாயங்களுக்கு செல்லும் ஆனால் இந்தாண்டு 40 நாட்கள் கால தாமதமாக பிளமிங்கோ பறவைகள் வருகை தந்துள்ளது.

பிறமிங்கோ பறவைகளை இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து இராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாபயணிகள் மற்றும் உள்ளுர் பொதுமக்கள் பறவைகள் உணவு தேடும் அரிய காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். 

இந்நிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் சமூகவிரோதிகள் வேட்டையாடி வந்ததால் கடந்த இரண்டு வருடங்களாக பிளமிங்கோ பறவைகள் வருவது தடைப்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளுர் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வந்த நிலையில் இந்தாண்டு வருகை வரும் பறவைகள் கடந்த சில நாட்களாக வந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் இந்த ஆண்டு 40 நாட்களுக்குப் பிறகு தனுஷ்கோடி பகுதிக்கு பிளமிங்கோ பறவைகள் வருகைதந்துள்ளது. தொடக்கத்தில் 400 பறவைகள் வந்த நிலையில் தற்போது 4 ஆயிரத்துக்கும் உட்பட்ட பறவைகள் குஜராத் மாநிலத்தில் இருந்து தனுஷ்கோடி பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளது.

பிளமிங்கோ பறவைகள் ஆண்டுதோறும் ஒரு வார காலம் இங்கு வருவதற்கான முக்கிய காரணம் பறவைகளுக்கு தேவையான உணவுக்காக மட்டுமே இப்பகுதிக்கு வருகிறது.

இந்த ஆண்டு கால தாமதமாக வந்ததற்கு  நீர் மாசுபாடு மற்றும் இராமேஸ்வர பகுதியில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கடலில் கலப்பதால் தண்ணீரின் பி எச்(PH) அளவு குறைந்தால் பறவைகள் உண்ணக்கூடிய பாசிவகைகள் உற்பத்தி ஆகாததால் வருகை வரும் பிளமிங்கோ பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இவ்வாண்டு குறைந்துள்ளது.

தனுஷ்கோடி சுற்றுலா தளமாகவும், ஆன்மீக தலமாக மட்டுமே மக்கள் பார்த்து வரும் நிலையில் தனுஷ்கோடி பல்லுயிர் பெருக்கத்திற்கான முக்கிய இடமாக இருப்பதால் அதனை பாதுகாத்தால் மீன்களின் வளம் பெருகி மீனவர்கள் வாழ்வாதாரம் அதிகரிக்கும். எனவே இந்த பகுதியை பாதுகாக்க மக்கள் வனத்துறையுடன் இணைந்து கடலில் மாசுபடுவதை நீர் மாசுபடுவதையும் தடுக்க வேண்டும் என பறவைகள்

ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share:

Related Articles