NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிச்சி மூட்டியவரை தூக்கி தரையில் அடித்துக் கொன்ற கைதி!

திருகோணமலை சிறைச்சாலையில்  இரு கைதிகள் கிச்சி மூட்டி விளையாடி கொண்டிருந்த போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தீவிரமடைந்து கொலையில் முடிந்துள்ளது.

இதன்போது கைதி ஒருவர் மற்றைய கைதியை தூக்கி தரையில் அடித்தமையால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது, ​​தாக்குதலுக்கு உள்ளான கைதி தலையில் அடிபட்டு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருகோணமலை – கிண்ணியா, மஹரூப் நகரைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

கொல்லப்பட்ட கைதியும், கொலையைச் செய்த கைதியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த நண்பர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles