NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தாயார் – ரஞ்சித் பண்டார

தன் மீதும் தன்னுடைய குழுவை சேர்ந்த இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றசசாட்டுக்களை மறுப்பதோடு முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தாயார் என கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு எதிர்க்கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாகவும் இது குறித்து சபாநாயகருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் பாராளுமன்றத்தில் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில், தன் மீதும் தன்னுடைய குழுவை சேர்ந்த இருவர் மீதும் இவ்வாறு  பொய்யான குற்றசசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனினும், என் மீது குற்றம் சுமத்திய பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதாரன, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக இனம்காணப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமென அவர் மேலும் கூறினார்.

Share:

Related Articles