NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குளவி கொட்டுக்கு இலக்கான ஜந்து பெண்கள்..!

சாமிமலை பகுதியில் உள்ள ஸ்ரஸ்பி தோட்ட எனண்டல் பிரிவில் நேற்று மதியம் 2.30 மணிக்கு குளவி கொட்டுக்கு இலக்கான ஜந்து பெண்கள் தோட்ட பேருந்து மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான ஜந்து பெண்கள் இன்று மதியம் தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த வேலையில் தேயிலை செடியின் வேர் பகுதியில் இருந்த குளவி கூடு களைந்து கொட்டி உள்ளது என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த ஜந்து பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான எஸ்.அம்பிகாவதி வயது 37 டப்லியூ.பி.ஏ.நந்தாவதி வயது 68,பி.பரமேஸ்வரி வயது 51, எஸ்.வி.மல்லிகா வயது 38, எல்.சிவஜோதி வயது 48,

இவர்களில் இருவர் சற்று அதிகமாக குளவி கொட்டுக்கு இலக்கிய உள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share:

Related Articles