NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கைபேசியால் வந்த வினை – இரு இளைஞர்கள் புகையிரதத்தில் மோதி பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வெயாங்கொடை – வத்துருவ புகையிரத நிலையத்துக்கு அருகில், கைபேசியில் பேசியவாறு தண்டவாளத்தில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.

இன்று (25) அதிகாலை 5.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு இளைஞர்களின் வீடுகளும் புகையிரத மார்க்கத்துக்கு அருகில் அமைந்துள்ள நிலையில், அவர்கள் இன்று காலை சுற்றுலா செல்வதற்கு தயாராகி வத்துருவ புகையிரத நிலையத்தை நோக்கி சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், இருவரும் கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டே நடந்து சென்றபோது, பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் வெயாங்கொடை – வத்துருவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

Share:

Related Articles