NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் திடீரென மாயமான கண் வில்லைகள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் சத்திர சிகிச்சை அறையிலிருந்த 10 கண் வில்லைகளை திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்திரசிகிச்சை அறையின் உதவியாளர் ஒருவரே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கொம்பனி வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கண் வில்லைகளின் பெறுமதி 369,000 ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles