NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“க.பொ.த சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் – கல்வி அமைச்சர் !

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை தேர்வானத்து மே இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles