NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

க.பொ.த பொதுப்பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு இன்று (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது.

பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறித்த திகதிக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 2022ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் எனவும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அமைச்சின் தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles