NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சகல கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டிலுள்ள அனைத்து கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த விசேட அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் இன்றைய தினம் (04) அறிவித்துள்ளார்.

அதில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாடு நடைபெற்ற அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளையும் யோசனைகளையும் ஓகஸ்ட் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

Share:

Related Articles