NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தால் ரணிலுக்கு பதவி வழங்கலாம்” -அசோக் அபேசிங்க !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு ஆதரவு வழங்கப்படுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் போது ஒருவரின் தோளில் அமர்ந்து செல்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles