NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சந்தேக நபரை கைது செய்ய சென்ற பொலிஸாரை கடித்த நாய்!

நாவுல பொபெல்ல பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரை கைது செய்ய சென்ற நாவுல பொலிஸ் குழுவினர் மீது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் தாக்கி பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் இடது காலை கடித்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் பரிசோதகர் சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாத்தளை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம், நாவுல பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி மற்றும் பொலிஸ் குழுவொன்று நேற்று (14) சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேக நபரை பொலிஸார் பெரும் முயற்சியுடன் கைது செய்துள்ளனர்.

Share:

Related Articles