NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாதாரணதரப் பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்!

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைகளை இலக்காக கொண்ட மேலதிக வகுப்புகள், விசேட கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பன எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் ஆறாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சாதாரணதரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி, விதிகளை மீறி மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளை நடத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் மே மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles