NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சிறுவன் கைது!

தங்கொட்டுவ பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கொடுவ – தும்மலகொடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்புணர்வுக்குள்ளான சிறுமி தங்கொட்டுவ – அடியாவல பிரதேசத்தில் உள்ள தொழிலாளி ஒருவரின் வீட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தங்கொடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Share:

Related Articles