NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிவனொளிபாதமலை முற்றத்திலிருந்து கீழே குதித்த இளைஞன் – சுயநினைவின்றி இருந்ததாக தகவல்

சிவனொளிபாதமலை முற்றத்திலிருந்து கீழே குதித்த இளைஞனைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை லக்ஷபான இராணுவ முகாமின் படையினர் நேற்று (20) காலை முதல் ஆரம்பித்தனர்.

சிவனொளிபாதமலை முற்றத்திலிருந்து கீழே குதித்த இளைஞன் குதிப்பதற்கு முன்னர் சுயநினைவின்றி இருந்ததாக இளைஞனுடன் சென்ற இரண்டு பெண்கள் நல்லதண்ணிய பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன இளைஞன் தொடர்பில் இரத்தினபுரி சிவனொளிபாதமலை வீதியில் உள்ள சிறிபாகம பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிவனொளிபாதமலை இரத்தினபுரி வீதியில் உள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து சிவனொளிபாதமலை தரிசிக்க வந்த இளைஞர் ஒருவர் கீழே குதித்துள்ளார்.இது அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அவர் அம்பாந்தோட்டை சூரிய வெவ பிரதேசத்தில் வசிக்கும் தினேஷ் ஹேமந்த என்ற 33 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles