NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனாவின் ‘Air China’ விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சீனாவின் எயார் சைனா செங்டு நகருக்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையிலான விமான சேவையை எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது.

அதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை செங்டு மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையே விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செங்டு தியான்ஃபு சர்வதேச விமான நிலையத்திலிருந்து வரும் விமானங்கள் குறித்த தினங்களில் இரவு 08:55க்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles