NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுதந்திர தின ஒத்திகையில் வான் சாகச வீரர்கள் விபத்து!

சுதந்திர தின  ஒத்திகைகள் காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய ஒத்திகையில் பங்கேற்றிருந்த பராசூட் வீரர்களில் ஒருவர், பராசூட்டில் இருந்து இறங்கும் போது விபத்துக்குள்ளானதில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அத்தோடு மேலும் இரண்டு பராசூட் வீரர்கள் கட்டத்தின் மேல் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பராசூட் வீரர்களில் ஒருவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய இரு படையினரை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles