NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுவிஸில் இருந்து யாழ் வந்த நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு வந்தவர் குளியறையில் மர்ம முறையில் உயிரிழந்துள்ளார்.

நவாலி தெற்கை சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுவிஸ் நாட்டில் வசித்து வரும் குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக கடந்த திங்கட்கிழமை இலங்கை திரும்பிய நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (09) வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

உடனே , வீட்டார் சந்தேகம் அடைந்து குளியலறை கதவினை உடைத்து உள்ளே சென்ற போது மர்ம முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles