ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வட மாகாணத்திலும் வெற்றி பெறுவதற்காக தேசிய மக்கள் சக்தி செயற்பட்டு வருகிறது.
அதற்கமைய ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது நல்லூர் – கிட்டுப்பூங்காவில் மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கிலேயே ஜனாதிபதியின் இந்த வருகை அமையவுள்ளது.
அத்துடன், அடுத்து வரும் நாட்களில் ரில்வின் சில்வா உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர்களும் வடக்குக்கு படையெடுத்து தீவிர பரப்புரைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.