NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பொது அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த விடயத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (22) காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

இந்நிலையில் குறித்த உத்தரவு தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பை சபாநாயகர் பாராளுமன்றில் சமர்ப்பித்தார்.

40ஆவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles