NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜப்பானில் செத்து கரையொதுங்கிய இலட்ச கணக்கான மீன்கள்!

பிரபல சுற்றுலா தலமாக விளங்கும் ஜப்பானுக்கு சொந்தமான ஹகோடேட் தீவில், திடீரென ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கிய சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முதலில் கணிசமான அளவு மீன்கள் கரையொதுங்கிய நிலையில், பொதுமக்கள் அந்த மீன்களை சேகரித்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.

பின்னர், நேரம் செல்லச்செல்ல இலட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

புகுஷிமா அணுமின் நிலையத்தின் கதிரியக்க கழிவுகள் நீரில் கலந்ததால் மீன்கள் இறந்ததாக கூறப்பட்டது. இதனால் அந்த மீன்களை சாப்பிட வேண்டாம் என அரசாங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையே மீன்கள் இறந்தது குறித்து விசாரணை நடத்துவதற்காக அங்கு ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர். அதன் முடிவு வெளிவந்த பின்னரே மீன்கள் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன.

Share:

Related Articles