NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜூன் 30ம் திகதி வரை தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள அவகாசம்..!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 30ஆம் திகதி வரை தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles