NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற 7 இலங்கையர்கள் கைது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற 7 இலங்கையர்கள் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 பேரும் எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டு உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜோர்தானிய இராணுவத்தை மேற்கோள்காட்டி அரபு இராச்சிய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜோர்டான்-இஸ்ரேல் எல்லைகளில் கடந்த ஆண்டுகளில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் துருக்கியில் இருந்து இஸ்ரேலுக்கு வேலை தேடி வந்தவர்கள் ஊடுருவிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு ஜோர்தானில் இருந்து 52 பேர் சட்டவிரோதமாக ஊடுருவினர் மற்றும் 2023 முதல் காலாண்டில் 23 பேர் அதேபோல் ஊடுருவலை மேற்கொண்டிருந்தனர்.

எகிப்தைப் போலவே ஜோர்தானும் இஸ்ரேலுடன் நீண்டகால இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மொராக்கோ உட்பட பல அரபு நாடுகள் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கு சமீபத்தில் ஒப்புக்கொண்டன.

எனினும், இயல்பாக்குவது மிகவும் சர்ச்சைக்குரியது என்றாலும் பாலஸ்தீனியர்கள் அதை தங்கள் தேசிய காரணத்திற்கு காட்டிக் கொடுப்பதாக கருதுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles