NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டாக்காவில் தீ விபத்து – 43 பேர் பலி!

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

35க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குறித்த கட்டடத்தில் சிக்கியிருந்த 75 பேரை மீட்டதுடன், இந்த தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

22 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles