NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டைட்டான் நீர்மூழ்கி விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய கோடீஸ்வரர் 10 வருடங்களுக்கு முன் இலங்கைக்கு விஜயம் – சுவாரஸ்ய தகவல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அண்மையில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்வையிட சென்றிருந்த சிறிய ரக டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பலில் பயணித்து உயிரிழந்த மிகப்பெரிய பிரித்தானிய கோடீஸ்வரரான Hamish Harding கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Hamish Harding கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் மகனுடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த போது குருநாகல் பகுதியில் வைத்து அவரது தனது பணப்பையை தொலைத்துள்ளார்.

இந்த பையை இலங்கையை சேர்ந்த 18 வயதான இளைஞன் ஒருவர் கண்டெடுத்துள்ள நிலையில், அது தொடர்பில் அந்த இளைஞன் அவரது பெரியப்பாவிடம் விடயத்தை தெரிவித்துள்ளார். அதகை தொடர்ந்து, பையில் இருந்த இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு பணப்பை தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது.

அந்த சமயம், விமானத்தில் ஏறியிருந்த Hamish Harding தனது விமான டிக்கட்டை உடனடியாக இரத்து செய்து, விமானத்தில் இருந்து இறங்கி, பணப்பையை பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளார்.

குறித்த பணப்பையில், அமெரிக்க டொலர்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்கள் பாரிய அளவில் காணப்பட்டுள்ளது. அதன் அப்போதைய பெறுமதி இலங்கை ரூபாய் மதிப்பில் 2 இலட்சமாகும்.

இந்த பை கிடைக்காதெனவும் அது தொடர்பான எதிர்பார்ப்பை கைவிட்ட நிலையிலேயே தான் பிரித்தானியா பயணிக்க திட்டமிட்டிருந்ததாக, Hamish Harding  தெரிவித்திருந்தார்.

அந்த பையை மீளப்பெற்று வீட்டிற்கு சென்று பார்த்த போது, அதில் எந்தவித குறைவும் இல்லாமல் பணம் அப்படியே இருந்துள்ளமை குறித்து நெகிழ்ந்துள்ளார். அத்துடன், அவர் அந்த பணத்தை இலங்கையருக்கு வழங்கிவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பியுள்ள சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles