தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 500 மேலதிக பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் பிரதி பொது மேலாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுவதுடன் முதல் கட்டம் 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை செயற்படுத்தப்படவுள்ளது.
அதன்படி புத்தாண்டு முடிந்து கொழும்புக்குத் திரும்பும் மக்களுக்காக, ஏப்ரல் 16ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவை இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.