NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தம்பியின் தாக்குதலில் உயிரிழந்த அண்ணன்!

குருவிட்ட பிரதேசத்தில் இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தம்பி கத்திரிக்கோலினால் தாக்கியதில் அண்ணன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

குருவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   

சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருவிட்ட பொலிஸார் கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles