NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தருஷி கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கட் சபையிடம் இருந்து ஒரு கோடி ரூபா ரொக்கப்பரிசு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஆசிய கிண்ணப்போட்டிகளில் தங்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கட் சபை ஒரு கோடி ரூபாவை ரொக்கப் பரிசாக வழங்க தீர்மானித்துள்ளது.

21 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை கொண்டு வந்தமை பாராட்டப்பட வேண்டியதென, இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்குழு பரிந்துரைத்ததாக அதன் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் இந்த பணப்பரிசு வழங்க தீர்மானிக்கப்பட்டதாக ஷம்மி சில்வா மேலும் குறிப்பிட்டார்.

Share:

Related Articles