NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட உப பொலிஸ் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெமட்டகொல்லேகம – தேவஹுவ பிரதேசத்தில் வசிக்கும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அவர், திருமணமாகாதவர் என்றும், தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட மனவேதனை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 15ஆம் தம்புள்ளை டென்சில் கொப்பேகடுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (17) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles