NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திடீரென கழன்று ஓடிய இ.போ.ச பேருந்தின் சக்கரம்…!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் முன் சக்கரம், வாகனம் சென்று கொண்டிருந்த போது கழன்று விழுந்து விபத்துக்குள்ளானதில், அருகில் உள்ள கடை ஒன்று சேதமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (27) இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். யட்டியந்தோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பேருந்தின் சக்கரமே இவ்வாறு கழன்று விழுந்துள்ளது.

வீதியில் ஓடிய சக்கரம் முச்சக்கரவண்டி மற்றும் கணினி பழுதுபார்க்கும் கடைக்கு சேதம் விளைவித்துள்ளது, எனினும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

கடை உரிமையாளரும் முச்சக்கரவண்டி உரிமையாளரும் கழன்ற சக்கரத்தை யட்டியாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன், ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு வழங்கப்படாமல் பஸ்ஸை அங்கிருந்து செல்லவிடாது தடுத்ததாகவும் கூறிய பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share:

Related Articles