NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருமலையில் தொடரும் கனமழை காரணமாக கந்தளாய் குளத்தின் வான்கதவுகள் திறப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக, கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், 10 வான்கதவுகளும் இன்று (09) ஒரு அடி உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளன.

அதேவேளை, தொடர்ச்சியான மழை காரணமாக, வெருகல், மாஞ்சோலைச்சேனை, மாஞ்சோலை மற்றும் அண்ணன் நகர் போன்ற பல பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மொரவௌ – பேரமடுவ குளங்கள் நிரம்பியுள்ளதால், மாவிலாறு நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

Share:

Related Articles