NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துருக்கியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் பலி; 30 பேர் படுகாயம்!

துருக்கியின் முஹ்லா மாகாணம், மர்மரிஸ் மாவட்டத்தில் இருந்து மெர்டின் மாகாணம் நோக்கி சென்ற பஸ் நேற்று (16) விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெர்சின் மாகாணம் யென்கஸ் பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் தடுப்புச்சுவர் மீது மோதி விழுந்துள்ளது.

குறித்த பஸ்ஸில் பயணித்த 39 பேரில் 9 பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து நேர்ந்த இடத்துக்கு விரைந்த பொலிஸார்இ படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles