NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெற்காசிய நகர்வல ஓட்டம் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் மலையக வீரர்!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இடம்பெறவுள்ள தெற்காசிய நகர்வல ஓட்டம் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்கு மலையக வீரர் விக்னராஜ் வக்ஷான் தகுதிப்பெற்றுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 3ஆவது தெற்காசிய நகர்வல ஓட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த தொடரை இலக்காக கொண்டு இலங்கை மெய்வல்லுனர் சங்கமும், லங்கா லயன்ஸ் மெய்வல்லுனர் கழகமும் இணைந்து தெரிவு போட்டியை நடத்தியிருந்தது.

அதில் இலங்கை இராணுவம் சார்பில் பங்கேற்ற மலையக வீரர் விக்னராஜ் வக்ஷான் முதலிடத்தை பெற்றதுடன், குறித்த தொடரில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

அவர் இந்த போட்டியை 32.11 செக்கன்களில் நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles