NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேசிய கண் வைத்தியசாலையின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய கண் வைத்தியசாலையின் செயற்பாடுகளை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சமீபத்தில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு பல நோயாளிகளுக்கு கண்ணில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால், கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சிக்கல்களை ஏற்படுத்திய மருந்து, பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் இன்று முதல் அறுவை சிகிச்சைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொழும்பகே தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles