NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நட்சத்திர ஹோட்டலில் வழங்கப்பட்ட பழுதடைந்த சூப் – கொழும்பில் சம்பவம்

கொழும்பின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பழுதடைந்த சூப் வழங்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 02 ஆம் திகதி இரவு கொழும்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அருகே உள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது

அங்கு உணவருந்தச் சென்றிருந்த தம்பதியொன்றுக்கு பழுதடைந்த சூப் பரிமாறப்பட்டிருந்த நிலையில், அது குறித்து அவர்கள் கோட்டை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

அதற்கமைய, சுகாதார வைத்திய அதிகாரிகள் அங்கு வந்து மாதிரியை பொரளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழங்கியதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பழுதடைந்த சூப்பை அருந்தியவர் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த ஹோட்டலுக்கு எதிராக சுகாதார அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

Share:

Related Articles