NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை 10 ஆம் திகதி ஆரம்பம்…!

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான செரியாபாணி எனும் பயணிகள் சொகுசுக் கப்பல் சேவை எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் இன்று பரிச்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, இன்று காலை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட செரியாபாணி எனும் பயணிகள் சொகுசுக் கப்பல் மதியம் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே இந்த பரிச்சாத்த நடவடிக்கைகளின் போது வருகை தந்துள்ளனர்.

இதையடுத்து பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொண்டமையை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், சுமார் அரை மணி நேரம் தரித்து நின்ற பின்னர் மீண்டும் இக்கப்பல் நாகப்பட்டினத்தை நோக்கி புறப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த கப்பல் சேவைக்கு இருவழிக் கட்ணமாக 53 ஆயிரத்து 500 ரூபாவும், ஒருவழிக் கட்டணமாக 27 ஆயிரம் ரூபாவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், பயணிகள் தங்களுடன் 40 கிலோ வரை பொருட்களைக் கொண்டு செல்ல முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles