NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டை கட்டியெழுப்பக்கூடிய சிறந்த அணி ஐக்கிய மக்கள் கூட்டணியுடனேயே உள்ளது – சஜித் பிரேமதாஸ

நாட்டை கட்டியெழுப்பக்கூடிய சிறந்த அணி ஐக்கிய மக்கள் கூட்டணியுடனேயே உள்ளதாக அதன் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தலவத்துகொட பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், திறன், நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பு என்பவற்றுக்கு ஏற்றவகையில் எமது நாட்டு இளைஞர் யுவதிகள் தங்களுக்கு விருப்பமான வர்த்தகத்தை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பம் ஐக்கிய மக்கள் கூட்டணியின் அரசாங்கத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் தகவல் தொழில்நுட்ப வலயத்தை ஆரம்பிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். ஏற்றுமதி பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குத் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகின்றது.

நாட்டை கட்டியெழுப்பக்கூடிய சிறந்த அணி ஐக்கிய மக்கள் கூட்டணியுடனேயே உள்ளது எனத் தெரிவித்தார்.

Share:

Related Articles