NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை, ஹாலிஎல, பசறை ,எல்ல பகுதிகளுக்கும், கண்டி மாவட்டத்தின் மெததும்பர, பாததும்பர பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு,குருணாகல் மாவட்டத்தின் ரிதிகம பகுதிக்கும், மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை, அம்பன்கங்கை கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles