NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீராடச் சென்ற 17 வயது மாணவன் மாயம்..!

கல்கிஸ்ஸையில் கடற்கரையில் நீராடச் சென்ற 17 வயதுடைய மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நேற்று (30) மாலை கடற்கரையில் நீராடச் சென்ற சிலரில் மூன்று பேர் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதன்போது , உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையின் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை மீட்டுள்ளனர்.ஆனால் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

கல்கிஸ்ஸை அபேசேகர மாவத்தையில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன மாணவனைக் கண்டுபிடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,

மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Share:

Related Articles