NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீர்த்தேக்கத்தில் மாயமான மாணவன்

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.காசல்ரீ தோட்டத்தில் வசிக்கும் 17 வயது நிரம்பிய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இந்த மாணவன் தன் குடும்ப உறுப்பினர்களுடன் பிற்பகல் 3.30 மணி அளவில் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளார்.காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பிரதேசவாசிகள் மற்றும் மீனவர்களுடன் இணைந்து மாணவனின் சடலத்தை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எச்சரிக்கையை புறக்கணித்து நீர்த்தேக்கத்தில் நீந்திக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Share:

Related Articles