NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 103 பேர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நைஜீரியாவின் – நைஜர் மாகாணத்தில் உள்ள எக்போடி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பின்னர் திரும்பிய படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த படகில் பலர் தங்களது மோட்டர் சைக்கிள்களை எடுத்து வந்திருந்த நிலையில், அதிக எடை காரணமாக படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சிறுவர்கள் உள்பட 103 பேர் பலியாகினர்.

தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் 100க்கு மேற்பட்டோரை மீட்டுள்ளனர். மேலும், காணாமல்போன பலரை தேடி வருகின்றனர்.

திருமணத்துக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய மக்கள் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share:

Related Articles