NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 64 பேர் உயிரிழப்பு..!

நைஜீரியா நாட்டில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றிச் சென்ற மரப்படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடமேற்கு நைஜீரியாவில், ஜம்பாரா மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாயப் பணிகளுக்காகத் தினந்தோறும் ஆற்றினை கடந்து செல்கிறார்கள்.அதன்போது 70 பேர் படகில் சென்ற போது திடீரெனெ படகு ஆற்றில் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் விவசாயிகள் 64 பேர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அவர்களில் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles