NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஞ்சாப் அணியை வீழ்த்தியது பெங்களுர் அணி!

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்ற 6-லீக் ஆட்டத்தில் Royal Challengers – Punjab Kings அணிகள் மோதின.

களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. 

அதிகபட்சமாக தவான் 45 ரன்கள் எடுத்தார். மேலும் கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ஷஷாங்க் சிங்கால் இந்த ரன்களை பஞ்சாப் அணி எடுக்க முடிந்தது. 

இதனையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளிசிஸ்- விராட் கோலி களமிறங்கினர். டுபிளிசிஸ் 3, க்ரீன் 3, பட்டிதார் 18, மேக்ஸ்வெல் 3 என விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆர்சிபி. இதனையடுத்து விராட் கோலி – அனுஜ் ராவத் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி அரை சதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியை ஸ்கெட்ச் போட்டு ஹர்சல் படேல் அவுட் ஆக்கினார். 

தினேஷ் கார்த்திக் மற்றும் லாம்ரோர் வெற்றிக்காக போராடினார். இறுதியில் ஆர்சிபி அணி 19.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Share:

Related Articles